The tears rollin down from my eyes..
They have no idea if they are outta sorrow or happiness..
Only my heart knows that it's outta sorrow...
What's the use if my heart knows.....?---Karthik-------
My Sweetheart never knows..........................
Hi Friends, I wanna share & publish my poems, quotes and works here which are in both Tamil and English.. Hope u guys 'l like it!!!!!!!! Enjoy!!!!!!!!! :)
The tears rollin down from my eyes..
They have no idea if they are outta sorrow or happiness..
Only my heart knows that it's outta sorrow...
What's the use if my heart knows.....?---Karthik-------
My Sweetheart never knows..........................
U killed me.. but u r not the killer...---Karthik-------
U ve made a sin.. but u r not the sinner...
Yes.. U won me.. but u r not the winner...
Though, u r not near....
U r always my dear......
"கவிதையே..."---Karthik-------
கவிதையே.. கண்கள் மூடு.. நெஞ்சம் உறங்கட்டும்...
கதவைத்திற.. காற்றும் வருது.. கொஞ்சம் வருடட்டும்...
நெஞ்சம் உறங்கி நேரம் ஆனது... கனவுகள் பெய்யட்டும்...
எனை ஆசை காட்டி மோசம் செய்யாமல்.. கனவுகள் நிற்கட்டும்...
உணர்வை கவிதையாக்கும் கருவி.. என் மூளையில்...
என் உணர்வுகள் கிடக்கும்.. சிலர் மனதில்..
ஏதோ ஒரு மூலையில்.....
கண்ணீர் தரும் கவிதைகள் கூட என் சிரிப்பு தருவதில்லை...
என்
இஷ்டங்கள் தரும் கண்ணீர் கூட என் கஷ்டங்கள் தருவதில்லை...
மலரின் வாசமும்.. சிலரின் நேசமும்...
அறிந்து கொண்டேன்...
விரைவில் வாடிவிடுமென்று....
---Karthik-------" My life can be explained even without words..
But not without you....."
"This is dedicated to my Best Friend Muthuraj who was my inspiration to start writing poems. This is for U da Nanba......."
"கவிஞனை கொடுத்தவன்"
---- எனக்குள்
புதைந்திருந்த கவிஞனை தோண்டி எடுத்தவன் நீ...
என் மனப்பறவையின் கவிச்சிறகுகளை அசையவைத்தவன் நீ...
அறிவாயா, இதற்கு நீ காரணம் என....?
அறிந்தேனா, அதுவரை நானும் ஒரு கவிஞனென...?
மறுமுகம் பார்த்து மனம் இனித்தேன்...
இருமுக ப்ரம்மனாய் கவிதைகள் படைக்க....
அன்பின் உருவேற்றமாம் நட்பு...
சொற்களின் உருவேற்றமாம் கவிதை...
ரெண்டும் ஒன்றாய் தந்தவன்..
கவிதை என்றால்...
கண்டிப்பாய் நீ வாழ்வில் என்றோ நொந்தவன்...
புல்தேகம் சேர்ந்த மழைத்துளி கண்டு மேகம் மகிழும்...
காகிதம் சேர்ந்த என் கவிதைத்துளி கண்டு இதயம் குளிரும்...
நீ...
மூட்டியது தீயாயினும், உதிர்வது பனி...
எழுந்தது அலையாயினும், முடிந்தது சிலை...
உனை கவிக்காமல் நானிருந்தால்..
சந்தேகம் வேண்டாம்..
அது என் மனசாட்சியின் கொலை...
என் மனதின் சிரிப்பு.. இன்று கவிதைச்சத்தத்துடன்...
நீ என்றும் என் நண்பனே.. என் வாழ்வின் அர்த்தத்துடன்....
While..
Clouds decorating the sky with glow of lightnings and music of thunder.... :)
Every rain drop sheds tears.. Leavin the clouds forever... :(
Clouds keep passing...
They're not bothered about the leaving rain drops...
But..
Drops keep dropping.. Tears....
Coz.. It's not happy in leaving the clouds....
I see myself as a rain drop here...
Imagine my pain of fallin down from such high...
At last.. At least.. rain drops reach ground.. it's destination...
But
My Tears.....??????????
Rain makes everyone happy...
Coz.. it never shows it's tears..
Even if it tries to.. it cannot........!!!!!!!!!!!!!!!!!!!!!!
"Your death may not be a part of your life...---Karthik-------
But..
It'll surely be a part of someone else's life..."
"I realized.. my life has started...---Karthik-------
The moment when the spark from your eyes ignited my heart!!!!"
"என் உயிர் தோழி"
சுவாசித்த காற்றே திருப்பி கிடைப்பதில்லை...
என்னை நேசித்த தோழி நீயா திருப்பி கிடைக்கபோகிறாய்...?
நட்பை மறந்து சுற்றம் பறந்தாய்...
உனை உயிராய் கொண்ட உலகம் மறந்தாய்....
வெறுத்தேன்.. உன் செயல்கள் சொல்லியது என்னென்ன....??
மறந்தேன்.. உனை வெறுத்த காரணங்கள் என்னென்ன....??
தோழமை தந்த தோழியே உன்னை மதித்தேன்....
நீ என்னை மறந்தும் ஏன் உனை நினைத்தேன் என்றென்னை மிதித்தேன்....
காதல் மட்டும் தானா.. கவிதைகள் படைக்கும்...?
இங்கு நட்பின் பிரிவு.. கவிதைகள் தெறிக்குதே....
கோவிலே உடைந்த பின்பு.. கல்வெட்டின் பயனும் முழுதா...?
மனக்கல்வெட்டில் அன்பை உடைப்பதும் எளிதா...?
காலப்படகில் கடந்தேன்.. தங்க மீனாய் கையில்... நீ...
என்னை கடந்த தூரம் கண்டேன்.. சுறா மீனாய் கண்ணில்...
"நட்பை புரியவைத்த காலமே.. உனக்கு நன்றி....
காலத்தை புரியவைத்த உன் நட்புக்கு எந்தன் நன்றி......."
அவள் நட்பின் காலம் கடந்த காலத்தின் நட்பு....!!!!!!
---Karthik-------
வானில் கூடிய புத்தம் புது நட்சத்திரங்கள்...
காலம் கரைந்து கலையும் நேரமிது....
விடைபெறும் நேரம் கண்ணீர் மழையாய்...
கரையை தேடி ஓடும் அலையாய்...
வானம் விட்டு செல்கிறோம்....
நினைவு மேகங்கள் துணைக்கு வருமோ...?
தனித்த உயிருக்கு சுகத்தை தருமோ...?
மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வருமோ...?
ஒன்றாய் சிரிக்க காலம் வருமோ...?
வானம் விட்டு செல்கிறோம்....
நான்கு உயிர்களும் கலக்கும் இடமோ...?
சுகங்கள், சுமைகளை பகிரும் இடமோ...?
பிரியும் நேரம் மனங்கள் கனமாய்...
பிரிந்த பின்பு நாட்கள் ரணமாய்...
வானம் விட்டு செல்கிறோம்....
சிரித்து மகிழ்ந்த கணங்கள் அதிகம்...
முறைத்து திரும்பிய கணங்கள் கடினம்...
எல்லாம் நிறைந்து வணக்கம் சொல்லும்...
உலகை அறிய காலம் தள்ளும்...
வானம் விட்டு செல்கிறோம்....
உரிமையெடுத்து உறவை ரசித்தோம்...
உரிமை கொடுத்து உறவை வளர்த்தோம்...
எங்கும காலடி சேர்ந்தே பதித்தோம்...
கேலி கிண்டலென சேர்ந்தே குதித்தோம்...
இந்த இனிமைகள் முடியுதே......................