Monday, August 16, 2010

Kaadhal Ini Illai

 "காதல் இனி இல்லை"

  விழியினில் காதல் தீயா...?கண்ணீரும் ஆறுதல் சொல்லும்...

  நினைவினில் காதல் நோயா...? நிஜங்களும் ஆறுதல் சொல்லும்...
  மனதினில் காதல்.. வந்து மரண வலிகள் தருகிறதே...
  அதை போக்க இங்கே.. எனக்குன்னை தவிர வேறில்லையே....

  நொடியில் பிறந்து.. நொடியில் சாகும்...
  காதல் எனக்கு.. உன் மேல் தோன்றவில்லை...
  உயிருக்கு பதிலாய்.. உன்னை ஊற்றி...
  உன்னையே உயிராய் வாழ்கிறேன்......

  கடல்களுக்குள்.. கறைகள் கலப்பதில்லை...
  உன் உலகில்.. வாழ்வினி எனக்கில்லை...
  வெயிலாலே.. மழை நீர் சுடுவதில்லை...
  பிரிந்தாலும்.. உன்னை மறப்பதில்லை...

  கவிதை வருகிறதே.. அதனுடன் கண்ணீர் வருகிறதே...
  இரண்டையும் கைகள் கொண்டு நிறுத்த முடிவதில்லை....
  உறக்கம் வருகிறதே.. கனவிலே உன் முகம் தெரிகிறதே...
  வருத்தத்திலும் என் மனம் சிரித்து.. விழித்ததும் அழுகிறதே...........
                                                                                  
                                                                                                       ---Karthik-------


No comments:

Post a Comment