இலையும்... தென்றலும்...
அன்று...
இலையை தொட்டுப்போன தென்றல்
இலையின் நிலைமை அறியவில்லை
தொட்டுப்போன தென்றலின் சுகத்தை
இலையும்.. ஒரு நாளும் மறக்கவில்லை
உலகம் முழுதும் உலவும் காத்து
தன்னை மீண்டும் தீண்டும் எனக்காத்து
நினைவுகள் மட்டும் நெஞ்சில் சேர்த்து
வலிகள் மட்டும் உயிரில் கோர்த்து
காலம் நகர்வதும் அறியாமல்.. காத்துக்கிடந்தது .. காற்றுக்காக...
அந்த காற்று வராத கனவுகளே இல்லை
கனவுகள் இல்லாத உறக்கமும் இல்லை
இவையெல்லாம் கண்டு அறிந்தும்.. காற்றுக்கோ
இலையை கண்டுக்கொள்ள நேரமேயில்லை...
அது இளையுதிர்க்காலம்...
காத்துக்கிடந்த இலை .. இலேசாய் வாடத்தொடங்கியது...
வாடத்தொடங்கிய இலை.. மெதுவாய் வாசம் இழந்தது...
வாசம் இழந்த இலை.. அன்று கிளையுதிர்ந்தது...
கிளையுதிர்ந்த இலை.. அதன் உயிரும் உதிர்ந்தது...
காத்து நின்ற கால்கள் ஓய்வு பெரும் நேரம்
கலையாதிருந்த கனவுகள் எல்லாம் கல்லறையைச்சேரும் நேரம்
அது காற்று வரும் நேரம்...
காலங்கள் இத்தனை கடந்த பின்பு...
தென்றலின் வருகை மீண்டும் அதே வழியில்...
இலையின் உயிரில்லா உருவக்காட்சி தென்றலின் விழியில்...
பார்த்ததும் இலையை அள்ளிக்கொண்டது...
தன்னோடு இலையை பத்திரமாகப்பற்றிகொண்டது...
பறக்கத்தொடங்கியது...
பறந்தது... அழகாக பறந்துக்கொண்டே சென்றது...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
வழியிலே... சாலையில் குவிந்திருக்கும் குப்பையோடு..
இலையை சேர்த்துவிட்டுச்சென்றது...
இலையின் உயிர் இப்போது காற்றோடு...
தன் தென்றலை கண்டுக்கொள்ளாமல்....
"உன்னை விரும்பாத தென்றலை (பெண்ணை) உன் சுவாசமென நினைத்தால்,
நீ உயிரோடு இருக்கும்போது உன் அன்பை குப்பையில் சேர்ப்பாள்,
நீ இறந்த பின்பு உன்னையே குப்பையில் சேர்ப்பாள்....................."
---Karthik-------
No comments:
Post a Comment